கிரிக்கெட் வாரியத்தின் மீது  ஆப்கான் வீரர் குற்றச்சாட்டு

லண்டன்: ஆப்கானிஸ்தான் கிரிக் கெட் வீரர் முகமது ஷாசாத் (படம்) தான் முழு உடல் தகுதியோடு இருக்கும்போதே தன்னை அணி யிலிருந்து நீக்கிவிட்டதாக ஆப்கா னிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் காயம் அடைந்த ஆப்கானிஸ்தான் வீரர் ஷாசாத், உலகக் கிண்ணப் போட்டி யில் ஆஸ்திரேலியா, இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு போட்டி களில் விளையாடினார்.

ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்னதாக ‘முழங்கால் காயம்’ காரணமாக அவர் உலகக் கிண்ணத் தொடரில் இருந்து விலகியுள்ளார் என ஆப் கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

இந்நிலையில் “நான் விளை யாடுவதற்கு போதுமான உடல் தகுதியுடன் இருக்கிறேன், என்னை ஏன் தகுதியற்றவர் என அறிவித்தனர் என்று எனக்குத் தெரியவில்லை. ஆப்கானிஸ்தான் நிர்வாகம் எனக்கு எதிராகச் சதி செய்கின்றது,” என ஷாசாத் கூறி உள்ளார்.

“நான் 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிக்கான அணியில் இருந்தும் நீக்கப்பட் டேன். இப்போது மீண்டும் நீக்கப் பட்டுள்ளேன்.

“உலகக் கிண்ணப் போட்டி யில் நான் விளையாடக்கூடாது என்றால், நான் கிரிக்கெட் விளையாட்டில் இருந்தே விலகிக் கொள்கிறேன்,” என்று உணர்ச்சி மேலிட சொன்னார்.

இது குறித்து ஆப்கானிஸ் தான் அணியின் தலைமை நிர் வாக அதிகாரி அசாதுல்லா கான், “ஷாசாத் உண்மையில் உடல் தகுதியற்றவர் எனவே தான் அவருக்கு வாய்ப்பு வழங்க முடியவில்லை. இது குறித்த முழு விவர அறிக்கை ஐசிசியிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது,” எனத் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!