லண்டன்: மழையால் புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளதுதான் பெரிய திருப்புமுனையாக உள்ளது. உலகக் கிண்ணத் தொடரில் மூன்று போட்டிகள் மழையினால் கைவிடப்பட்டன. அதனால் புள்ளிப்பட்டியலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உலகக் கிண்ண தொடரில் மழையின் காரணமாக கைவிடப்பட்ட இன்றைய போட்டியையும் சேர்த்து மொத்தம் 16 லீக் போட்டிகள் நிறைவடைந்து உள்ளன. இதில் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகளில் வென்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 2 வெற்றி 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது.
இந்தியா 2 போட்டிகளிலும் வென்று 3வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி 4வது இடத்திலும் உள்ளது. இலங்கை 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது தான் பெரிய திருப்புமுனையாக உள்ளது. அந்த அணியின் 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டதால் 2 புள்ளிகளைப் பெற்றது. இலங்கை 4 போட்டிகளில் 1 வெற்றி, 1 தோல்வி, 2 முடிவு இல்லை என மொத்தம் 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 6 மற்றும் 7வது இடங்களில் 3 புள்ளிகளுடன் பங்ளாதேஷும் பாகிஸ்தானும் உள்ளன. பாகிஸ்தான் ஓட்ட விகிதத்தில் பங்ளாதேஷ் அணிக்கு அடுத்து, அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும் என்று கணிக்கப்பட்ட தென்னாப்பிரிக்க அணி 4 போட்டிகளிலும் தோற்றது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியின்போது மழையால் போட்டி கைவிடப்பட்டதால் 1 புள்ளி பெற்று 7வது இடத்தில் உள்ளது. 3 போட்டிகளிலும் தோற்று கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான் அணி உள்ளது.