லண்டன்: செல்சி காற்பந்துக் குழுவின் நிர்வாகி மௌரிசியோ சர்ரி, 60, யுவெண்டஸ் குழுவில் இணைவதற்கு செல்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்து உள்ளது.
சர்ரியின் கீழ், பிரிமியர் லீக் பட்டியலில் செல்சி மூன்றாம் இடத்திற்கு உயர்ந்தது.
மேலும் அவர் வழி காட்டுதலில் கடந்த மாதம் செல்சி யூரோப்பா லீக் கிண்ணம் வென்றதும் குறிப் பிடத்தக்கது.
இது சர்ரியின் நிர்வாக வர லாற்றில் முதல் கிண்ணமும்கூட.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் மூன்றாண்டு ஒப்பந்தத்தில் செல்சியின் நிர்வாகியாக பொறுப் பேற்றார் சர்ரி.
எனவே, தற்போது இழப்பீட்டு தொகையாக 5 மில்லியன் யூரோ கொடுக்கவும் ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளது.