பாரிஸ்: ஐரோப்பிய காற்பந்துச் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மிஷல் பிளாட்டினி நேற்று தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
2022ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்தும் பொறுப்பு கத்தாரிடம் வழங்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பான விசாரணைக்காக அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.