புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் புவ னேஸ்வர் குமார் குணமடைந்து வருவதாகக் கூறப்படும் நிலை யில், நவ்தீப் சைனி இங்கிலாந் துக்குச் சென்றுள்ளார்.
கடந்த 16ஆம் தேதி பாகிஸ் தானுக்கு எதிரான உலகக் கிண்ண ஆட்டத்தின்போது புவ னேஸ்வர் குமாருக்கு காலின் தொடைப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் மைதானத் தில் இருந்து பாதியிலேயே வெளியேறி னார்.
அதிகபட்சம் மூன்று போட்டிகளில் அவர் பங்கேற்க முடியாது என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சௌத்ஹேம்டனில் உள்ள விடுதியின் படிகளில் ஏறும்போது புவனேஸ்வர் குமார் அசௌகரியமாக உணர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் அடுத்த ஒரு வாரத்தில் புவனேஸ்வர் குமார் முழு உடல்தகுதியை பெறுவார் என்று இந்திய அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே ராஞ்சி மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் இளம் வேகப் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி, வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இங்கிலாந்து விரைவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மேலும் உலகக் கிண்ணத்திற் கான இந்திய அணி அறிவிக்கப் பட்ட போது ரிஷப் பந்த் உடன் நவ்தீப் சைனியும் ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையே, மூட்டுப் பகுதி யில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கிண்ணப் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து ஆல் ரவுண்டர் அந்தரே ரஸல் விலகினார்.
நாளை இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோத உள்ள நிலையில், ரஸலுக்குப் பதில் சுனில் அம்பரிஸ் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப் பட்டுள்ளார்.