அர்ஜெண்டினா, சிலி குழுக்கள் மோதிய கோப்பா அமெரிக்கா காற் பந்துத் தொடரின் மூன்றாவது இடத்திற்கான ‘பிளே-ஆஃப்’ ஆட்டத்தின்போது ஏற்பட்ட கைகலப்பு காரணமாக மெஸ்ஸி, சிலி வீரர் மெடல் ஆகிய இரு வருக்கும் சிவப்பு அட்டை காண் பிக்கப்பட்டது.
14 ஆண்டுகள் கழித்து, மெஸ்ஸிக்குச் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப் பட்டது குறிப்பிடத்தக்கது. மெஸ்ஸியின் காற்பந்து வாழ்க் கையில் அவர் பெற்ற இரண்டாவது சிவப்பு அட்டை இது. பந்தைத் தங்கள் வசப்படுத்த இருவரும் முயன்றபோது, 37வது நிமிடத்தில் கைகலப்பு ஏற்பட்டது. ஆனால், மெஸ்ஸி அவ்வளவு முரட்டுத்தனமாக நடந்துகொள்ள வில்லை என்றும் அவர் வெளி யேற்றப்பட்டது மிகவும் கடுமையான நடவடிக்கை என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக, 12வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் முதல் கோலைப் போட செர்ஜியோ அகு வேரோவிற்கு உதவியாக இருந்தார் மெஸ்ஸி. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் டைபாலா ஒரு கோல் போட, அர்ஜெண்டினா இரண்டு கோல் களில் முன்னிலை பெற்றது. பிற்பாதி ஆட்டத்தில் °கிடைத்த பெனால்டி வாய்ப்பில் சிலி ஒரு கோல் போட 2=1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வெற்றி பெற்றது.