நேப்பள்ஸ்: திடல்தடப் போட்டியில் இந்திய வீராங்கனை டுட்டீ சந்த் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இத்தாலியில் நடைபெற்று வரும் உலக பல்கலைக்கழக தடகள
போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய இளம் வீராங்கனையான டுட்டீ சந்த் 11.32 விநாடிகளில் தூரத்தைக் கடந்து தங்கத்தைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் அனைத்துலக திடல்தடஒப் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்
பதக்கத்தை வென்ற முதல்
இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை டுட்டீ சந்த் படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் சுவிட்சர் லாந்தின் டெல் போன்டே வெள்ளி
யும் ஜெர்மனியின் லிசா குவா யீ வெண்கலமும் வென்றனர்.