உலகக் கிண்ண காற்பந்துத் திருவிழா 2022ல் கத்தாரில் நடக்கிறது. இந்தத் தொடரில் கத்தார் நேரடியாகத் தகுதிபெறும். மற்றவை தகுதிச் சுற்று அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இதில் சிங்கப்பூர் அணி, சவூதி அரேபியா, உஸ்பெகிஸ்தான், பாலஸ்தீனம், ஏமன் போன்ற நாடுகளுடன் மிகக் கடினமான ‘டி’ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் குழுவுக்கு மரண அடி கொடுக்கக் கூடிய பிரிவு என்ற பொருள்பட இதை ‘குருப் ஆஃப் டெத்’ என காற்பந்து விமர்சகர்கள் கூறுவதுண்டு. மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பெரிய உடற்கட்டுடனான வீரர்களுடன் மோதுவதில் சிங்கப்பூர் வீரர்கள் என்றுமே சிரமப்பட்டுள்ளனர் என்பதுடன் சவூதி அரேபியா, உஸ்பெக்கிஸ்தான் போன்ற நாடுகளை சிங்கப்பூர் காற்பந்தில் வென்றதில்லை என்பது நினைவுகூரத்தக்கது.
ஆசிய கண்ட தகுதிச் சுற்று செப்டம்பர் 5 முதல் ஜூன் 9 வரை நடக்கிறது. 40 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளன.
இந்தியா ‘இ’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. இந்தியா, பங்ளாதேஷ், கத்தார், ஓமான் மற்றும் கத்தார் அணிகள் ஒரே பிரிவில் இடம்பிடித்துள்ளன. முதல் இடம் பிடிக்கும் 8 அணிகளும் இரண்டாவது இடம் பிடிக்கும் சிறந்த நான்கு அணிகளும் அடுத்த தகுதிச் சுற்றுக்கு முன்னேறும். அதேபோல் 2023 ஆசிய கிண்ணத் தொடருக்கு இந்த 12 அணிகளும் தானாகவே தகுதி பெறும்.