புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான ரவி சாஸ்திரி, வரும் 2021ஆம் ஆண்டு வரை அப்பதவியில் தொடருவார் என அறிவிக்கப் பட்டுள்ளது.
கபில்தேவ், அன்ஷுமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகிய மூவர் அடங்கிய தேர்வுக்குழு, அணியின் புதிய பயிற்றுவிப்பாளருக்கான நேர்காணலை நேற்று நடத்தியது. அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கபில்தேவ், மேலும் இரு ஆண்டுகளுக்கு சாஸ்திரியே அப்பதவியில் நீடிப்பார் என அறிவித்தார்.
பந்துவீச்சு, களக்காப்பு, பந்தடிப்பு பயிற்றுவிப்பாளர்கள் யார் என்ற விவரம் நாளை மறுநாள் திங்கட்கிழமை அறிவிக்கப்படும்.