முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் மரணம்

சென்னை: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான வி.பி.சந்திரசேகர் (படம்) நேற்று முன்தினம் மரணமடைந்தார். இவருக்கு வயது 57.

மைலாப்பூரில் உள்ள தம் வீட்டில் சந்திரசேகர் தம்முயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணிக்காக 1988 முதல் 1990 வரை ஏழு போட்டிகளில் விளையாடிய இவர், கிரிக்கெட் வர்ணனையாளராகவும் இந்திய அணித் தேர்வுக் குழுத் தலைவராகவும் இருந்துள்ளார்.

ஐபிஎல்லின் தொடக்க கட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேலாளராகவும் இவர் இருந்தார்.

தமிழ்நாடு பிரிமியர் லீக் அணிகளுள் ஒன்றான காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளரான இவருக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர்.

“வெகுநேரம் அறைக்கதவைத் தட்டியும் திறக்காததால் சன்னல் வழியாகப் பார்த்தபோது மின்விசிறியில் அவர் தூக்கில் தொங்கியது தெரிந்தது.

“கிரிக்கெட் தொடர்பான தொழில்களில் இழப்பு ஏற்பட்டுவிட்டதால் மன அழுத்தத்தில் இருப்பதாக அவர் கூறிவந்தார்” என்று மறைந்த சந்திரசேகரின் மனைவி சொன்னார்.

இவரது மறைவிற்கு டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, அனில் கும்ளே, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!