உலக பூப்பந்தாட்டப் போட்டி: சிங்கப்பூரின் லோ கோ இயூ போராடி வென்றார்

பாசெல்: சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் 25வது உலகப் பூப்பந்தாட்ட வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் சிங்கப்பூர் பூப்பந்தாட்ட வீரர் லோ கியான் இயூ தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு 18-21, 21-13, 21-11 என மூன்று செட்கள் விளையாடி இறுதியில் தாமஸ் ராக்ஸல் என்பவரை வீழ்த்தியுள்ளார். அதன் முடிவில் அவர், மண்டியிட்டு கைகளை உயர்த்து தனது வெற்றியைக் கொண்டாடினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2வது சுற்றில் களம் இறங்கிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, பாய் பூ போவை (தைவான்) நேற்று சந்தித்தார்.

43 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். பி.வி.சிந்து அடுத்து பீவென் ஜாங்கை (அமெரிக்கா) எதிர்கொள்கிறார்.

முன்னதாக, ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான ஜப்பானின் அகானே யமாகுச்சி 14-21, 18-21 என்ற நேர் செட் கணக்கில் சிங்கப்பூர் வீராங்கனை யோ ஜியா மின்னிடம் வீழ்ந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!