பெசில்: உலக வெற்றியாளர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத் வெண்கலம் வென்றார். இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியர் ஒருவர் பதக்கம் வெல்வது 36 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல்முறை.
சுவிட்சர்லாந்தின் பெசில் நகரில் நடந்து வரும் இப்போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத், ஜப்பான் வீரர் கெண்டோவை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் சாய் பிரனீத் 21-13, 21-8 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றார்.
இதையடுத்து உலக வெற்றியாளர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத் வெண்கலம் வென்றுள்ளார்.