மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி இருக்கிறார் அவ்வணி வீரரான தினேஷ் கார்த்திக்.
ஐபிஎல் கிரிக்கெட் அணியான கோல்கத்தா நைட் ரைடர்சின் தலைவராக இருக்கும் தினேஷ் கார்த்திக், பிசிசிஐயின் ஒப்பந்தப் பட்டியலில் உள்ளார்.
கோல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக்கான், கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்கும் டிரின்பேகோ நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராகவும் உள்ளார்.
இந்நிலையில், டிரின்பேகோ நைட் ரைடர்ஸ் அணி ஆடிய போட்டியைக் காண முன்னாள் நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கலமுடன் அந்த அணியின் சீருடையை அணிந்துகொண்டு் சென்றுள்ளார் தினேஷ் கார்த்திக்.
ஆனால் இதற்காக இவரோ அல்லது கோல்கத்தா அணி நிர்வாகமோ பிசிசிஐயிடம் முறையான அனுமதி பெறவில்லை.
இந்நிலையில், டிரின்பேகோ அணி வீரர்களின் அறையில் கார்த்திக் இருக்கும் புகைப்படங்
களைப் பார்த்த பிசிசிஐ, “ஒப்பந்தப் பட்டியலில் இருந்து உங்களை ஏன் நீக்கக்கூடாது?” என விளக்கம் கேட்டு தினேஷ் கார்த்திக்கிற்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து, கார்த்திக் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், “பிசிசிஐயின் அனுமதி பெறாமல் அங்கு சென்றதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி அந்த அணி தொடர்பான எவ்வித செயல்பாடுகளிலும் பங்கேற்க மாட்டேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.