மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிராக நேற்று முன்தினம் ஆஷஸ் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 185 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சமன் செய்யும் நோக்குடன் பந்தடித்த இங்கிலாந்து வீரர்கள், ஆஸ்திரேலியாவின் துல்லியமான பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் தடுமாறினர்.
இரட்டைச் சதம் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அத்துடன், ஆஷஸ் கிண்ணத்தையும் அது தக்கவைத்துக்கொண்டது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்த வெற்றிக்காக ஆஸ்திரேலிய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 24 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.