பார்சிலோனா: நட்சத்திரக் காற்பந்து ஆட்டக்காரர் லயனல் மெஸ்ஸி வரும் செவ்வாய்க்
கிழமை பின்னிரவில் ஜெர்மனியின் பொருஸியா டோர்ட்மண்ட் குழுவிற்கெதிரான சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகம்தான் என்று பார்சிலோனா குழுவின் நிர்வாகி வல்வெர்டே தெரிவித்துள்ளார்.
கெண்டைக்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மெஸ்ஸி இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தப் பருவத்தில் அவர் இல்லாமல் பார்சிலோனா குழு தடுமாறி வருகிறது.
ஸ்பானிய லா லீகாவின் தொடக்க ஆட்டத்தில் அத்லெட்டிக் பில்பாவிடம் பார்சிலோனா தோற்று அதிர்ச்சியளித்தது. மூன்று ஆட்டங்கள் முடிந்த நிலையில் நான்கு புள்ளிகளை மட்டுமே பெற்று எட்டாம் இடத்தில் இருந்த அக்குழு, நேற்றிரவு வெலன்சியாவை எதிர்த்து ஆடவிருந்தது.