இன்சியான்: கொரியப் பொது விருது பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினார் இந்தியாவின் முதல்நிலை வீராங்கனையும் உலக வெற்றியாளருமான பி.வி.சிந்து.
கடந்த வாரம் சீனாவில் நடந்த போட்டியிலும் முதல் சுற்றுடன் நடையைக் கட்டிய கொரிய ஓப்பனில் எழுச்சி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது.
உலகத் தரவரிசையில் ஐந்தாமிடத்தில் இருக்கும் சிந்து, தம்மைவிட ஐந்து இடங்கள் பின்தங்கியுள்ள அமெரிக்க வீராங்கனை பீவென் ஸாங்கை எதிர்கொண்டார். முதல் செட்டை 21-7 என எளிதாகக் கைப்பற்றிய சிந்து, இரண்டாம் செட்டைக் கடும் போராட்டத்திற்குப் பின் 22-24 என்ற கணக்கில் இழந்தார். பின் மூன்றாவது செட்டையும் அவர் 15-21 என இழந்ததால் வெற்றி கைவிட்டுப் போனது.
ஆடவர் பிரிவில் சாய் பிரணீத் காயம் காரணமாக முதல் சுற்றின் இடையிலேயே வெளியேறினார்.