இந்தியா 326 ஓட்டங்கள் முன்னிலை

புனே: இந்திய, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது.

நேற்று முன்தினம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், தென்னாப்பிரிக்கா மூன்று விக்கெட்டு கள் இழப்பிற்கு 36 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் அது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

அணித் தலைவர் டு பிளசிஸ் 64 ஓட்டங்களும் டி காக் 31 ஓட்டங்களும் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். இதனால், மோசமாக ஆடிக்கொண்டிருந்த தென்னாப்பிரிக்க அணியில் ஒன்பதாவது விக்கெட்டுக்கு சேர்ந்த பிலாந்தர், மஹாராஜ் இணை மிகச் சிறப்பாக விளையாடினர். மஹாராஜ் 132 பந்துகளில் 72 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிலாந்தர் 44 ஓட்டங்களுடன் இறுதி வரை களத்தில் நின்றார். இறுதியில், 275 ஓட்டங்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல் அவுட்டானது.

இந்திய அணி சார்பில் அஸ்வின் நான்கு விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்டுகளும் முகமது ஷமி இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையைவிட தென்னாப்பிரிக்க அணி 326 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!