தேசிய விளையாட்டரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசிலும் நைஜீரியாவும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன.
வெற்றி பெற முடியாத ஏமாற்றம் ஒருபுறம் இருக்க, ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் நெய்மார் காயமடைந்து ஆட்டத்தைத் தொடர முடியாமல் வெளியேறியது பிரேசிலுக்கு இரட்டிப்பு சோகத்தைத் தந்தது.
ஆனால் பிற்பாதி ஆட்டத்தில் தமது வீரர்கள் சிறப்பாக விளையாடியதாகவும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி தகுதி சுற்றில் பிரேசில் வெற்றிகளைக் குவிக்கும் என்று பயிற்றுவிப்பாளர் டிட்டே உறுதி அளித்தார்.
கடந்த வாரம் நடைபெற்ற ஆட்டத்தில் செனகலுடன் 1-1 என பிரேசில் சமநிலை கண்டது.