பிலிப்பீன்ஸ்: இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூர் காற்பந்துக் குழுவுக்குக் கடுமையான சவால் காத்திருக்கிறது. அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டும் என்று இலக்கு கொண்டிருக்கும் 22 வயதுக்கு உட்பட்டோருக்கான சிங்கப்பூர் காற்பந்துக் குழு, 'பி' பிரிவில் இடம்பெறுகிறது.
அந்தப் பிரிவில் நடப்பு வெற்றியாளர் தாய்லாந்து, 2017ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் வெண்கலம் வென்ற இந்தோனீசியா, வியட்னாம், லாவோஸ், புருணை ஆகிய குழுக்களும் இடம்பெறுகின்றன.
எனவே, முதல் சுற்றைக் கடந்து செல்வது எளிதான காரியமாக இருக்காது. போட்டி அடுத்த மாதம் 26ஆம் தேதி தொடங்குகிறது. 'ஏ' பிரிவில் போட்டியை ஏற்று நடத்தும் பிலிப்பீன்ஸ், மலேசியா, மியன்மார், கம்போடியா, திமோர் லெஸ்டே ஆகிய குழுக்கள் உள்ளன.