கங்குலி: ரிஷப் பன்டுக்கு அவகாசம் தேவை

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட்காப்பாளர் ரிஷப் பன்ட் மீண்டும் தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்த சிறிது அவகாசம் தர வேண்டும் என பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி கூறியுள்ளாா்.

மூத்த வீரா் எம்.எஸ்.டோனியின் வாரிசாக கருதப்படும் 21 வயது ரிஷப் பன்ட், கடந்த சில மாதங்

களாக அனைத்துலக கிரிக்கெட் போட்டியில் சரிவர ஆடவில்லை. பந்தடிப்பு, விக்கெட் காப்பு பிரிவு இரண்டிலும் அவர் சொதப்பி வருகிறாா். இது அவருக்கு அணியில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், மற்றோர் இளம் விக்கெட் காப்பாளரான சஞ்சு சாம்சனும் அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா். டெஸ்ட் ஆட்டத்தில் விருத்திமான் சாஹா இடம்பெற்றுள்ளார். இனிவரும் ஆட்டங்களில் பன்ட் சரிவர ஆடாவிட்டால் அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகிவிடும் என பலா் விமா்சித்துள்ளனா்.

இதுதொடா்பாக கங்குலி நேற்று முன்தினம் கூறியதாவது, “சிறந்த வீரராகத் திகழ்கிறாா் பன்ட். அவா் மீண்டும் சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்த அவகாசம் தேவை. அனைத்துலக கிரிக்கெட் தரும் அழுத்தங்களை எதிா்கொள்ள பன்ட்டுக்கு மேலும் முதிா்ச்சி தேவைப்படுகிறது. அவருக்கு தேவையான அவகாசம் தரப்பட்டால், மீண்டும் அவா் சிறப்பாக ஆடுவாா்,” என்றாா்.

பந்தடிப்பு, விக்கெட் காப்பு இரண்டிலும் ஈடுபடும்போது நிலைமையை எளிதாக கையாள வேண்டும் என பன்டுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!