ஆறு ஓவர்களில் அனைவரும் ஆட்டமிழப்பு; ஓர் ஓட்டம்கூட இல்லை

இந்திய உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றில் அணியின் அனைத்து வீரர்களும் ஒரு ஓட்டம்கூட எடுக்காமல் ‘டக்அவுட்’ ஆகி தோல்வியைத் தழுவினர்.

மும்பையில் நடந்த 'ஹாரிஸ் ஷீல்ட்' கிரிக்கெட் போட்டியில் 'சில்ரன்ஸ் வெல்ஃபேர் ஸ்கூல்' அணியின் அனைத்து வீரர்களும் 'டக் அவுட்' ஆக, கூடுதல் ஓட்டங்களாக கிடைத்த 7 ஓட்டங்கள் மட்டுமே அந்த அணிக்குக் கிடைத்தது.

இந்த அணியின் அனைத்து வீரர்களும் ஆறு ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.

முதலில் பந்தடித்த எதிரணியான சுவாமி விவேகானந்தர் பன்னாட்டுப் பள்ளி 39 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 761 ஓட்டங்கள் எடுத்தது.

விவேகானந்தா அனைத்துலகப் பள்ளியின் வேகப்பந்து வீச்சாளர் 3 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனையடுத்து 'சில்ரன்ஸ் வெல்ஃபேர்' பள்ளி அணி 754 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

3 மணி நேரத்தில் 'சில்ரன்ஸ் வெல்ஃபேர்' பள்ளி, 39 ஓவர்களை மட்டுமே வீசியதால் அபராதமாக 156 ஓட்டங்கள் விவேகானந்தா அணிக்கு வழங்கப்பட்டது.

ஆனால், நம்பிக்கையை மூலதனமாக்கி 'சில்ரன்ஸ் வெல்ஃபேர்' பள்ளி இறுதிவரை போராடியது குறிப்பிடத்தக்கது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!