புடியான்: உலகக் கிண்ணத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் தங்கம் வென்றதையடுத்து, இந்தியா 3 தங்கப் பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
சீனாவின் புடியான் நகரில் உலகக் கிண்ணத் துப்பாக்கிச் சுடுதல் இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் இந்தியாவின் 17 வயது இளம் வீராங்கனை மனு பாக்கர், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், 244.7 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார். அத்துடன் ஜூனியர் பிரிவில் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார்.
அதன்பின்னர் 20 வயது தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், 250.8 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார்.
இந்நிலையில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இந்திய வீரரான 17 வயது பன்வார் திவ்யன்ஷ் சிங் 250.1 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார்.