வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரையும் கைப்பற்றிய இந்திய மகளிர்

ஜமைக்கா: வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்த இந்திய மகளிர் அணி, ஒருநாள் கிரிக்கெட் தொடரைக் கைப்பற்றிய நிலையில், ஐந்து போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரையும் தற்போது கைப்பற்றியுள்ளது.

நேற்று முன்தினம் பிரோவிடென்சில் நடைபெற்ற கடைசி 20 ஓவர் போட்டியில், பூவா தலையா வென்ற இந்திய அணி பந்தடிப்பைத் தேர்வு செய்தது.

தொடக்க வீராங்கனைகளான ஷஃபாலி வர்மா 9 ஓட்டங்களிலும் ஸ்மிரிதி மந்தனா 7 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

அதன்பின் வந்த ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் 50, வேதா கிருஷ்ணமூர்த்தி 57 ஓட்டங்களும் அடிக்க இந்திய பெண்கள் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்கள் சேர்த்தது.

பின்னர் 135 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் களம் இறங்கினர்.

தொடக்க வீராங்கனை நைட் 22, விக்கெட் காப்பாளர் கேம்பெல் 19 மட்டுமே இரட்டை இலக்க ஓட்டங்களை எட்ட, 7 விக்கெட் இழப்பிற்கு 73 ஓட்டங்கள் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணியால் அடிக்க முடிந்தது.

இதனால் இந்திய பெண்கள் அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸை 5-0 என ஒயிட்வாஷ் செய்துள்ளது.

சுஷ்மா வர்மா தொடர் நாயகி விருதையும் வேதா கிருஷ்ணமூர்த்தி ஆட்ட நாயகி விருதையும் பெற்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!