ஜமைக்கா: வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்த இந்திய மகளிர் அணி, ஒருநாள் கிரிக்கெட் தொடரைக் கைப்பற்றிய நிலையில், ஐந்து போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரையும் தற்போது கைப்பற்றியுள்ளது.
நேற்று முன்தினம் பிரோவிடென்சில் நடைபெற்ற கடைசி 20 ஓவர் போட்டியில், பூவா தலையா வென்ற இந்திய அணி பந்தடிப்பைத் தேர்வு செய்தது.
தொடக்க வீராங்கனைகளான ஷஃபாலி வர்மா 9 ஓட்டங்களிலும் ஸ்மிரிதி மந்தனா 7 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
அதன்பின் வந்த ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் 50, வேதா கிருஷ்ணமூர்த்தி 57 ஓட்டங்களும் அடிக்க இந்திய பெண்கள் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்கள் சேர்த்தது.
பின்னர் 135 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் களம் இறங்கினர்.
தொடக்க வீராங்கனை நைட் 22, விக்கெட் காப்பாளர் கேம்பெல் 19 மட்டுமே இரட்டை இலக்க ஓட்டங்களை எட்ட, 7 விக்கெட் இழப்பிற்கு 73 ஓட்டங்கள் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணியால் அடிக்க முடிந்தது.
இதனால் இந்திய பெண்கள் அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸை 5-0 என ஒயிட்வாஷ் செய்துள்ளது.
சுஷ்மா வர்மா தொடர் நாயகி விருதையும் வேதா கிருஷ்ணமூர்த்தி ஆட்ட நாயகி விருதையும் பெற்றனர்.