பிரிஸ்பன்: பிரிஸ்பன் டெஸ்டில் பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் ரிஸ்வானின் போராட்டம் வீணானது. ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சால் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ், 5 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பனில் நடைபெற்றது.
முதலில் பந்தடித்த பாகிஸ்தான் 240 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஆசாத் ஷபிக் 76 ஓட்டங்கள் எடுத்தார். கேப்டன் அசார் அலி 39ஓட்டங்களும், முகமது ரிஸ்வான் 37 ஓட்டங்களும், ஷான் மசூத் 27 ஓட்டங்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டும் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஜோ பேர்ன்ஸ் களம் இறங்கினர். ஜோ பேர்ன்ஸ் 97 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். நன்கு ஆடிய வார்னர் 154 ஓட்டங்களில் வெளியேறினார். தொடர்ந்து பொறுப்புடன் ஆடி சதமடித்த லாபஸ்சாக்னே 185 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய மேத்யூ வேட் அரை சதமடித்து 60 ஓட்டங்களில் வெளியேறினார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 335 ஓட்டங்களில் ஆட்ட மிழந்தது. இதன்மூலம், இன்னிங்ஸ் மற்றும் 5 ஓட்டங்களில்ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.