நியூசிலாந்துடன் பகலிரவு டெஸ்ட்: கங்குலி விளக்கம்

புதுடெல்லி: நியூசிலாந்து பயணத்தில் இந்திய அணி பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுமா என்ற கேள்விக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சௌரவ் கங்குலி பதில் அளித்துள்ளார்.

இந்திய அணி அடுத்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி முதல் மார்ச் 4ஆம் தேதி வரை நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 ஆட்டங்கள், மூன்று ஒருநாள் ஆட்டங்கள், இரு டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடுகிறது.

நியூசிலாந்து பயணத்தில் இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் சாத்தியம் உள்ளதா என்று கங்குலியிடம் கேட்கப்பட்டது.

“இதுகுறித்து நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. நியூசிலாந்து தொடருக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. சற்று பொறுத்திருந்து பாருங்கள்.

எதிர்காலத்தில் இந்திய அணி அதிக அளவு பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏராளமான ரசிகர்கள் இந்த போட்டியைப் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று கங்குலி பதிலளித்தார்.

கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி முதல்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது.

சொந்த மண்ணில் நடந்த முதல் பகலிரவு டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்ளாதேஷை எளிதாக வீழ்த்தியது.

பகலிரவு டெஸ்ட் போட்டி இந்தியாவில் முதல்முறையாக நடைபெறுவதற்கு கங்குலி காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!