லண்டன்: மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவின் உரிமையாளரான ஃபெரான் சொரியானோ இந்தியன் சூப்பர் லீக் காற்பந்துக் குழுவான மும்பை சிட்டியை வாங்கியுள்ளார்.
மும்பை சிட்டியின் 65% பங்குகளை வாங்கியது பற்றி நேற்று முன்தினம் கூறிய சிஎஃப்சி எனும் சிட்டி காற்பந்துக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி ஃபெரான் சொரியானோ கூறுகையில், “இந்தியாவில் உள்ள காற்பந்து ஆர்வலர்கள் ஐரோப்பிய ரசிகர்களைப் போலவே நடந்து கொள்கிறார்கள்.
"மேலும் வரும் ஆண்டுகளில் இந்தியாவில் காற்பந்து விளையாட்டு பெரும் வளர்ச்சி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
"அனுபவங்கள், தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொண்டு, இங்குள்ள வீரர்களை ஊக்குவிப்பதையே நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்று சொன்னார்.
மும்பை சிட்டியின் மீதமுள்ள 35 விழுக்காட்டு பங்கு பிமல் பரேக், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரிடமே தொடர்ந்து இருக்கும்.
நியூயார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான், உருகுவே, ஸ்பெயின், சீனா உள்ளிட்ட நாடுகளின் காற்பந்துக் குழுக்களில் முதலீடு செய்துள்ள சிஎஃப்சி நிறுவனம் எட்டாவதாக இந்தியாவில் மும்பை சிட்டி குழுவை வாங்கியுள்ளது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity