தென்கிழக்காசிய விளையாட்டுகளின் காற்பந்துப் போட்டியில் நேற்று புருணையுடன் சிங்கப்பூர் தமது இறுதி ஆட்டத்தில் மோதி 7-0 எனும் கோல் கணக்கில் அபார வெற்றி கண்டது.
இதுவரை ஆடிய நான்கு ஆட்டங்களில் ஒரு கோல் கூட போடாத சிங்கப்பூர் இந்த ஆட்டத்தில் புருணையை வெளுத்து வாங்கியது. இந்தப் போட்டியில் விளையாடுவதற்கு முன்னரே போட்டியிலிருந்து இரு அணிகளுமே நீக்கப்பட்டுவிட்டனர்.