ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார் துப்பாக்கி வீரர்

புதுடெல்லி: காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டில் வெண்கலப்பதக்கம் வென்றவர் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ரவிக்குமார்.

ஊக்கமருந்து சோதனையில் ரவிக்குமார், தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்தியது தெரியவந்தது.

இதனால் அவருக்கு இரண்டாண்டு வரை விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

தேசிய ஊக்கமருந்து தடுப்புக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு சில தினங்களில் அவருக்கு என்ன தண்டனை என்பதை அறிவிக்க இருக்கிறது.

தலைவலி மற்றும் ரத்தகொதிப்புக்காக மருத்துவர் தந்த மருந்துகளைச் சாப்பிட்டதாகவும் உலக ஊக்கமருந்து தடுப்புக் கழகத்தால் தடைசெய்யப்பட்ட பட்டியலில் இருந்த மருந்தைக் கவனக்குறைவாக உட்கொண்டது பின்னர் தான் தெரியவந்தது என்று ரவிக்குமார் கூறினார்.

“எனது விளக்கத்தைத் தேசிய ஊக்கமருந்துத் தடுப்புக் கழகம் புரிந்துகொண்டுள்ளது. வேண்டுமென்றே ஊக்கமருந்தைச் சாப்பிடவில்லை. கவனக்குறைவாகத் தவறு நடந்துவிட்டதை சுட்டிகாட்டியுள்ளேன்.

“அதனால் குறைந்த தண்டனை வழங்குவார்கள் என்று நம்புகிறேன்,” என்றும் ரவிக்குமார் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!