சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனி அடுத்த ஆண்டு அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடுவார் என்று வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார் பிராவோ.
“டோனி இன்னும் ஓய்வு பெறவில்லை. ஆகையால், டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் அவர் விளையாடுவார் என்றே நினைக்கிறேன். வெளிவிவகாரங்கள் கிரிக்கெட் மீது தாக்கம் செலுத்த அவர் அனுமதிக்கமாட்டார். அதையே எங்களுக்கும் கற்றுத் தந்துள்ளார். ‘ஒருபோதும் பதற்றமடையாதீர்கள், உங்கள் திறமை மீது நம்பிக்கை வையுங்கள்’ என்று அவர் சொல்வார்,” என்றார் பிராவோ.
கடந்த ஆண்டு அக்டோபரில் அனைத்துலகப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்த அவர், இப்போது அதைத் திரும்பப்பெற்றுக்கொண்டு, அனைத்துலக டி20 போட்டிகளில் மீண்டும் ஆடத் தயார் என அறிவித்து இருக்கிறார்.