பாரிஸ்: பிரேசில் நட்சத்திர காற்பந்து வீரரான நெய்மார், பிரபல ஸ்பானிய குழுவான பார்சிலோனா மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2013 முதல் 2017 வரை பார்சிலோனாவிற்காக விளையாடிய 27 வயது நெய்மார், பின் 222 மில்லியன் யூரோ என்ற சாதனை விலைக்கு பிரான்சின் பிஎஸ்ஜி குழுவிற்குத் தாவினார்.
இருந்தாலும், விரைவில் அவர் பார்சிலோனா குழுவிற்குத் திரும்பக்கூடும் என பேச்சு அடிபடுகிறது. இந்த நிலையில், தனக்கான 3.5 மில்லியன் யூரோ ஊதியத்தை பார்சிலோனா இன்னும் தனக்கு அளிக்கவில்லை என்று நெய்மார் வழக்குத் தொடுத்துள்ளதாக ‘எல் முண்டோ’ எனும் ஸ்பானிய நாளிதழ் தெரிவித்துள்ளது.