அதிக சதம்: நான்காமிடத்திற்கு உயர்ந்த ரோகித்

விசாகப்பட்டினம்: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்தோர் பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சனத் ஜெயசூரியாவுடன் நான்காம் இடத்தைப் பகிர்ந்துகொண்டார் இந்திய வீரர் ரோகித் சர்மா.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது.

முதலில் பந்தடித்த இந்திய அணிக்கு ரோகித் - ராகுல் இணை அபார தொடக்கம் தந்தது.

சிறப்பாக ஆடிய ரோகித் 107 பந்துகளில் சதத்தை எட்டினார். இது அவருக்கு ஒருநாள் போட்டிகளில் 28வது சதம். அவர் 138 பந்துகளில் 159 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து ராகுலும் சதமடித்தார். இது அவருக்கு மூன்றாவது சதம். அவர் 102 ஓட்டங்களை எடுத்தார்.

50 ஓவர் முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 387 ஓட்டங்களை எடுத்தது.

ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்தோர் பட்டியலில் முன்னாள் இந்திய நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.

இந்திய அணியின் இப்போதைய தலைவர் விராத் கோஹ்லி (43 சதங்கள்) இரண்டாமிடத்திலும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பான்டிங் (30 சதங்கள்) மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!