ஒரே இன்னிங்சில் நான்கு பாகிஸ்தான் வீரர்கள் சதம்

கராச்சி: இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் நான்கு பேர் சதம் அடித்து சாதனை படுத்துள்ளனர்.

இப்போட்டியின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 191 ஓட்டங்களும் இலங்கை 271 ஓட்டங்களும் சேர்த்தது.

80 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் இலங்கை இந்த டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2வது இன்னிங்சில் பாகிஸ்தானின் முதல் நான்கு பேட்ஸ்மேன்களும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தொடக்க வீரர்களான ஷான் மசூத், அபித் அலி இணைந்து முதல் விக்கெட்டுக்கு 278 ஓட்டங்கள் குவித்தனர். ஷான் மசூத் 135 ஓட்டங்களும் அபித் அலி 174 ஓட்டங்களும் விளாசினர்.

அடுத்து வந்த அணித் தலைவர் அசார் அலி 118 ஓட்டங்கள் சேர்த்தார். பாபர் அசாம் 100 ஓட்டங்கள் சேர்த்தார்.

இதற்கு முன் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் (122), ராகுல் டிராவிட் (129), வாசிம் ஜாபர் (138), தினேஷ் கார்த்திக் (129) பங்ளாதேஷ் அணிக்கெதிராக சதம் அடித்திருந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!