22 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா

கட்டாக்: ஒரே ஆண்டில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற ஜெயசூர்யாவின் 22 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பொருதிய கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒடிசாவின் கட்டாக்கில் இன்று நடைபெற்றது. இப்போட்டிக்கு முன் இந்த ஆண்டில் ரோகித் சர்மா 3 வடிவிலான போட்டிகளில் தொடக்க வீரராக 2,379 ஓட்டங்களை எடுத்திருந்தார். இன்னும் அவர் 9 ஓட்டங்கள் எடுத்தால் ஒரே ஆண்டில் தொடக்க வீரராகக் களம் இறங்கி அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைக்கும் வாய்ப்புடன் நேற்று களம் இறங்கினார். 316 ஓட்ட இலக்குடன் ரோகித் சர்மா - லோகேஷ் ராகுல் ஜோடி களம் இறங்கியது.

ரோகித் சர்மா 10 பந்துகளில் 9 ஓட்டங்களை எட்டினார். அப்போது 22 ஆண்டுகால ஜெயசூர்யாவின் சாதனையை முறியடித்தார். இலங்கை முன்னாள் தொடக்க வீரரான ஜெயசூர்யா 1997ஆம் ஆண்டில் 2,387 ஓட்டங்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!