புதுடெல்லி: இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றவர்.
டேவிஸ் கிண்ணத் தொடரில் இரட்டையர் போட்டிகளில் கிராண்ட்ஸ்லாம் உள்ளிட்ட 44 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர்.
இந்நிலையில், 2020ஆம் ஆண்டுவரை நடக்க உள்ள சில டென்னிஸ் போட்டிகள் தமது கடைசி போட்டியாக இருக்கும் எனவும் அதன் பின்னர் ஓய்வுபெற முடிவு செய்துள்ளதாகவும் தெரி வித்துள்ளார்.
டென்னிஸ் விளையாட்டில் 7 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ஒரே வீரர் லியாண்டர் பயஸ் என்பது குறிப்பிடத்தக்கது.