21 வயதுக்குட்பட்ட இந்திய விளையாட்டாளர்கள் போட்டியிடும் ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகள் அசாம் மாநிலம், கௌஹாத்தி நகரில் நேற்று தொடங்கின. இம்மாதம் 22ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டிகளில் 20 விளையாட்டுகளில் போட்டியாளர்கள் பதக்கங்களுக்காகப் போட்டியிட உள்ளனர். போட்டியாளர்களுள் ஒருவராக இல்லாதபோதும் திப்ருகர் மாவட்டத்தில் நடந்த அம்பெய்தல் விளையாட்டுப் பயிற்சியில் ஷிவாங்கினி என்ற இந்த 12 வயதுச் சிறுமியும் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக இன்னொரு விளையாட்டாளர் எய்த அம்பு இவரது தோள்பட்டையைத் துளைத்து, கழுத்து வரை சென்றுவிட்டது. உடனடியாக விமானம் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இவர் கொண்டு செல்லப்பட்டார். இவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விமானக் கட்டணத்தையும் இவரது சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் இந்திய விளையாட்டு ஆணையம் ஏற்றுக்கொண்டு உள்ளது. இந்திய விளையாட்டு ஆணையத்தில் ஷிவாங்கினி பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. படம்: இந்திய ஊடகம்
பயிற்சியின்போது பாய்ந்த அம்பு
11 Jan 2020 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Jan 2020 10:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!