செல்ல மகளின் முன்னிலையில் வாகை சூடினார் செரினா

ஆக்லாந்து: ஆஸ்திரேலிய பொது விருது டென்னிஸில் செரினா வில்லியம்ஸ் வாகை சூடியுள்ளார். இதன் மூலம் அவர் தமது மூன்றாண்டு வெற்றி தாகத்தைத் தீர்த்துக்கொண்டார்.

38 வயது உலக டென்னிஸ் நட்சத்திரமான செரினா நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஜெசிகா பெகுலாவை 6-3, 6-4 என்னும் நேர் செட்டில் வென்று பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் வெற்றி பெற்ற குதூகலத்தில் தமது கைகளை செரினா உயர்த்தியபோது அவரது கணவர் அலெக்ஸிஸ் ஒஹானியனும் இரண்டு வயது மகள் ஒலிம்பியாவும் அவரைக் கண்டனர்.

2017ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒரு பிள்ளைக்குத் தாயான பின்னர் அவர் வென்றிருக்கும் முதல் பட்டம் இது. அந்த ஆண்டில் ஆஸ்திரேலிய பொது விருதுப் போட்டி நடைபெற்றபோது அவர் கருவுற்றிருந்தார்.

முன்னதாக நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் செரினாவின் நெருங்கிய தோழியான கேரொலின் வேஸ்னியாக்கியை தோற்கடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார் பெகுலா. இருப்பினும் இறுதிப் போட்டியில் செரினாவிடம் அவர் வீழ்ந்தார். இந்த வெற்றியின் மூலம் கிடைக்கும் பரிசுத் தொகையை ஆஸ்திரேலிய காட்டுத் தீ நிவாரண நிதிக்கு வழங்குவதாக செரினா அறிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!