லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் நேற்று அதிகாலை நடைபெற்ற ஒரு போட்டியில் கடைசி இரண்டு நிமிடங்களில் தோல்வியின் விளிம்பிலிருந்து நியூகாசல் குழு தப்பியது.
எவர்ட்டன் குழுவைச் சந்தித்த நியூகாசல் குழு ஆட்டத்தின் கூடுதல் நேரம்வரை இரண்டு கோல்கள் விட்டுக்கொடுத்து ேதால்வியை தழுவும் நிலையில் இருந்தது.
ஆனால், மாற்று ஆட்டக்காரராக நியூகாசலுக்கு களமிறங்கிய ஃபிேளாரியன் லெஜுயுன் என்ற வீரர் முதலில் 94ஆம் நிமிடத்தில் எவர்ட்டன் அணியினர் தற்காப்பில் சுணக்கம் காட்டியபோது இரு கால்களையும் தலைக்கு மேல் உயர்த்தி பந்தை உதைக்க, செய்வதறியாது தவித்த எவர்ட்டன் கோல்காப்பாளர் ஜோர்டான் பிக்ஃபர்ட்டை தாண்டி பந்து கோல் வலைக்குள் சென்றது.
அதைத் தொடர்ந்து அடுத்த நிமிடத்திலேயே ஃபிரீகிக் வாய்ப்புக்குப் பின் பந்தை சரிவர கோல் எல்லைப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்த எவர்ட்டன் தவறியது.
அதைப் பயன்படுத்தி லெஜுயுன் மீண்டும் பந்தை கோல் நோக்கி உைதக்க நியூகாசலுக்கு இரண்டாவது கோல் விழுந்தது.
அதுவரை நன்றாக விளையாடி வெற்றி பெறும் நிைலயிலிருந்த எவர்ட்டன் இந்த இரண்டு கோல்களால் ஆட்டத்தை 2-2 என முடித்துக்ெகாள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
இதேபோல் முந்தைய ஆட்டத்திலும் கூடுதல் நேரத்தில் கோல் போட்டு ஆர்சனலுடன் சமநிலை கண்ட நியூகாசல் குழுவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.
கீழ்நிலைக்குச் செல்லக்கூடிய குழுக்களின் பட்டியலிலிருந்து தப்பிப் பிழைத்த நியூகாசல் குழுவின் நிர்வாகி ஸ்டீவ் புருஸ், “இது அபாரமான முடிவு. இந்தப் போட்டியில் எனது வீரர்களை நான் குறைசொல்ல முடியாது.
“இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவோம் என எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால், நாங்கள் விடாது முயற்சி செய்தோம்.
“காற்பந்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு இந்த ஆட்டமே சாட்சி.
“இது ஒரு நம்பமுடியாத விளையாட்டு, ஆனால் அபாரமான ஒன்று. போட்டி முடிந்துவிட்டது என்று எந்த நிலையிலும் ஓய்ந்துவிடக்கூடாது என்பதற்கு இந்த ஆட்டமே சான்று,” என்று கருத்துைரத்தார்.
மற்றோர் ஆட்டத்தில் முன்னணி வீரர் டாவிட் லுவிஸை ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் தப்பாட்டத்தால் பறிகொடுத்த நிலையிலும் எஞ்சிய பத்து வீரர்களைக் கொண்டு ஆர்சனல் குழு செல்சியை 2-2 என தடுத்து நிறுத்தியது.
பெனால்டி எல்லைக்குள் ெசல்சியின் ஆப்பிரகாமை தள்ளிவிட்ட டாவிட் லுவிஸை நடுவர் சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றினார்.
ஆனால், ஆர்சனலின் பெலரின் 87ஆம் நிமிடத்தில் தமது அணியின் சார்பாக கோல் போட்டு காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.
வேறோர் ஆட்டத்தில் அண்மைய காலமாக முன்னேறி வரும் செளத்ஹேம்டன் குழு கிறிஸ்டல் பேலஸ் குழுவை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.