லண்டன்: ஹல் சிட்டி காற்பந்துக் குழுவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி எஃப்ஏ கிண்ணத்தின் ஐந்தாம் சுற்றுக்குள் செல்சி நுழைந்தபோதும் அந்த வெற்றி அக்குழுவின் நிர்வாகி ஃபிராங்க் லாம்பார்டுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை.
நேற்று முன்தினம் பின்னிரவில் நடந்த அந்த ஆட்டத்தின் ஆறாம் நிமிடத்தில் மிச்சி பட்ஷுவாயியும் 64ஆம் நிமிடத்தில் ஃபிக்காயோ டொமோரியும் கோல் அடித்து செல்சியின் வெற்றியை உறுதிசெய்தனர். தங்களுக்குக் கிடைத்த பல கோல் வாய்ப்புகளை செல்சி வீரர்கள் வீணடித்ததாலும் 78வது நிமிடத்தில் எதிரணி கோல் அடித்ததாலும் லாம்பார்ட் விரக்தி அடைந்தார். இதனால், புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்ய அவர் ஆர்வமாக இருக்கிறார்.
மற்றோர் ஆட்டத்தில் வெஸ்ட் புரோம்விச் 1-0 என வெஸ்ட் ஹேம் யுனைடெட்டைத் தோற்கடித்தது. ஸ்பர்ஸ் - சௌத்ஹேம்டன் குழுக்கள் மோதிய ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது.