புவனேஸ்வர்: ஒன்பது அணிகளுக்கு இடையிலான புரோ லீக் ஹாக்கி போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.
இதில் இந்தியாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள கலிங்கா விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ள இந்திய அணி, நடப்பு வெற்றியாளரும் இரண்டாம் நிலை அணியுமான ஆஸ்திரேலியாவுடன் மோதியது.
ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 4-1 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்தியா பிறகு இரண்டு கோல்களைப் போட்டது.
ஆனால் இந்தியாவால் இறுதி வரை ஆட்டத்தைச் சமன்செய்ய முடியாமல் போனது.
இதன் விளைவாக ஆஸ்திரேலியா 4-3 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சொந்த மண்ணில் தோற்றது.

