மகளிர் டி20 கிரிக்கெட்: பங்ளாதேஷ் அணியை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

பெர்த்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நேற்று முன்தினம் பங்ளாதேஷ் அணியை இந்திய அணி வீழ்த்தியது.

‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் பூவா தலையாவில் வென்ற வென்ற பங்ளாதேஷ் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் களமிறங்கிய இந்திய அணி, 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷாஃபாலி வர்மா 39 ஓட்டங்களை சேர்த்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பங்ளாதேஷ் அணி, இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை இழந்தது. 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ஓட்டங்களை மட்டுமே எடுத்ததால், 18 ஓட்ட வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

அபாரமாக பந்துவீசிய பூனம் யாதவ் 3 விக்கெட்டுகளையும் ஷிகா பாண்டே 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!