கொரோனா கிருமித்தொற்று காரணமாக இவ்வாண்டு கோடைப் பருவத்தில் சிங்கப்பூரில் நடக்கவிருந்த அனைத்துலக வெற்றியாளர் கிண்ணப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், ஜெர்மனியின் பொருஸியா டோர்ட்மண்ட் ஆகிய மூன்று முன்னணிக் குழுக்கள் தேசிய விளையாட்டரங்கில் நடைபெற இருந்த அந்த ஆட்டங்களில் பங்கேற்கவிருந்தன என்று ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தி கூறியது.
“ரசிகர்கள், குழுக்கள், ஆட்டக்காரர்கள், ஊழியர்கள், பங்காளிகள் ஆகியோரது சுகாதாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் நாங்கள் அதிக முன்னுரிமை அளித்து வருகிறோம். ஆகையால், அனைவரின் நலன் கருதி இவ்வாண்டு அனைத்துலக வெற்றியாளர் கிண்ணப் போட்டிகள் இங்கு நடத்தப் படாது,” என்று போட்டிகளின் ஏற்பாட்டாளரான ‘ரிலவன்ட் ஸ்போர்ட்ஸ்’ குழுமம் தெரிவித்துள்ளது.