பாரிஸ்: இம்மாதத்திலும் அடுத்த மாதத்திலும் திட்டமிடப்பட்டுள்ள எல்லா அனைத்துலகக் காற்பந்துப் போட்டிகளையும் ஒத்திவைக்க வேண்டும் என்று அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் (ஃபிஃபா) பரிந்துரைத்துள்ளது.
அதே நேரத்தில், இறுதி முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பை போட்டி ஏற்பாட்டாளர்களிடம் விட்டுவிடுவதாக ஃபிஃபா குறிப்பிட்டது.
2022 உலகக் கிண்ணத்திற்கான தகுதிச் சுற்று ஆட்டங்களை ஆசியாவும் தென்னமெரிக்காவும் தள்ளிவைத்துள்ள நிலையில், அதற்கான மறுஅட்டவணையைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாகவும் ஃபிஃபா தெரிவித்துள்ளது.

