சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்குப் பின்னர் தமக்குத் தொண்டை எரிச்சல் இருப்பதாகக் கூறிய நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் லாக்கி ஃபெர்குசன், அவ்வணி தங்கி இருந்த ஹோட்டலிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
அவரை கொரோனா கிருமி தொற்றியிருக்கிறதா என்பதை அறிய மருத்துவச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனை முடிவு தெரிந்த பிறகே, அவர் ஊர் திரும்ப முடியுமா என்பது தெரியவரும்.
முன்னதாக, ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனும் தொண்டை எரிச்சல் இருப்பதாகக் கூற, அவரிடம் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவரை கிருமி தொற்றவில்லை என உறுதியானது.

