பார்வையாளர்கள் இல்லாத ஐபிஎல்

பார்வையாளர்கள் இல்லாத ஐபிஎல்

2 mins read
543cd1bd-e068-45dc-b96a-dac29e2d9eb5
போட்டிகளைத் தொடங்குவது குறித்து ஏப்ரல் 15க்குப் பிறகு முடிவாகும் என்கிறார் சவுரவ் கங்குலி. படம்: ஏஎஃப்பி -

மும்பை: நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரும் ஆட்­கொல்லி நோயான கொரோனா கிருமி பாதிப்பு, ஒரே இடத்­தில் ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் கூட தடை, வெளி­நாட்டு வீரர்­கள் இந்­தி­யா­வுக்கு வரு­வ­தற்­கு­ரிய விசா வழங்­கு­வது ஏப்­ரல் 15 வரை நிறுத்­தம் போன்ற கார­ணங்­க­ளால் ஐபி­எல் போட்­டி­கள் ஏப்­ரல் 15ஆம் தேதி வரை தள்ளி வைக்­கப்­பட்­டுள்­ளன. முன்­ன­தாக, 8 அணி­கள் இடை­யி­லான 13வது ஐபி­எல் 20 ஓவர் கிரிக்­கெட் போட்­டி­களை வரு­கிற 29ஆம் தேதி மும்­பை­யில் தொடங்க ஏற்­பா­டு­கள் நடை­பெற்று வந்­தன. அவை அத்­த­னை­யும் நிறுத்­தப்­பட்­டு­விட்­டன.

ஐபி­எல் போட்­டி­கள் தொடர்­பில் அடுத்­த­கட்ட நட­வ­டிக்கை குறித்து விவா­திக்க ஐபி­எல் ஆட்சி மன்­றக் குழு கூட்­டம் மும்­பை­யில் சனிக்­கி­ழமை மாலை நடந்­தது. இந்­திய கிரிக்­கெட் வாரிய தலை­வர் சவு­ரவ் கங்­குலி, செய­லா­ளர் ஜெய்ஷா, ஐபிஎல் தலை­வர் பிரி­ஜேஷ் பட்­டேல் உள்ளிட்ட பலர் கலந்­து­கொண்­ட­னர். ஐபி­எல் ஒளி­ப­ரப்பு நிறு­வ­ன­மான ஸ்டார் ஸ்போர்ட்­ஸின் நிர்­வா­கி­களும் பங்­கேற்­ற­னர்.

இந்­தக் கூட்­டத்­தில் ஐபி­எல் போட்­டி­களை நடத்­து­வது குறித்து ஏழு அம்­சங்­கள் விவா­திக்­கப்­பட்­டன. போட்­டி­க­ளின் எண்­ணிக்­கையை குறைப்­பது, அணி­களை இரு பிரி­வா­கப் பிரித்து லீக் சுற்­றில் மோத­விட்டு அதில் டாப்-4 அணி­களை பிளே-ஆப் சுற்­றில் விளை­யாட வைப்­பது, வார­இ­றுதி நாட்­களில் இரட்டை ஆட்­டங்­க­ளின் எண்­ணிக்­கையை அதி­கப்­ப­டுத்­து­வது, 60 ஆட்­டங்­க­ளை­யும் ரசி­கர்­கள் இன்றி நடத்­து­வது உள்­ளிட்ட வாய்ப்­பு­கள் குறித்து ஆலோ­சிக்­கப்­பட்­டன.

இருப்­பி­னும் போட்­டி­களை வெளி­நாட்­டுக்கு மாற்­று­வது குறித்து எது­வும் விவா­திக்­கப்­ப­ட­வில்லை. ஜூன் மாதம் அனைத்­து­ல­கப் போட்­டி­கள் வந்­து­வி­டும் என்­ப­தால்­ மே 31க்குள் ஐபி­எல் போட்­டி­களை முடித்­தாக வேண்­டிய நெருக்­க­டி­யில் இந்­திய கிரிக்­கெட் வாரி­யம் உள்­ளது.

கூட்­டத்­திற்­குப் பின் இந்­திய கிரிக்­கெட் வாரிய தலை­வர் சவு­ரவ் கங்­குலி கூறு­கை­யில், "ஏப்­ரல் 15ம் தேதி போட்­டி­க­ளைத் தொடங்­கி­னால் அது குறைக்­கப்­பட்ட போட்­டி­கள் கொண்ட தொட­ரா­கவே இருக்­கும். எத்­தனை போட்­டி­கள் என்­பதை என்­னால் இப்­போது கூறமுடி­யாது. பார்வை யாளர்கள் இல்­லா­மல் போட்­டி­களை நடத்­து­வது பற்­றி­கூட ஏப்­ரல் 15க்குப் பிறகே முடி­வெ­டுக்­கப்­படும்.

"போட்­டி­கள் தொடங்­கும் தேதி குறித்து இப்­போ­தைக்­கு கூறு­வ­தற்­கில்லை," என்­றார்.

கிங்ஸ் லெவன் பஞ்­சாப் அணி­யின் உரி­மை­யா­ளர் நெஸ் வாடியா கூறு­கை­யில், "ஐபி­எல் போட்­டி­கள் எப்­போது தொடங்­கும் என்­பது இப்­போ­தைக்கு யாருக்­கும் தெரி­யாது. 2, 3வாரங்­கள் கழித்து கொரோனா பாதிப்பு நிலை­மையை ஆய்வுசெய்த பின் அடுத்து என்ன செய்­வது என்று முடிவு செய்­வோம்," என்­றார்.