கோவா: ஐஎஸ்எல் காற்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் அட்லெடிகோ டி கோல்கத்தா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
6வது இந்தியன் சூப்பர் லீக் காற்பந்து (ஐஎஸ்எல்) தொடரின் இறுதி ஆட்டம் கோவா ஃபடோர்டாவில் உள்ள நேரு விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
முதல் பாதியில் தொடர்ந்து போராடியபோதிலும் சென்னை அணியால் கோல் அடிக்க முடியாமல்போனது. இதனால் முதல் பாதியில் கோல்கத்தா அணி 1-0 என முன்னிலை வகித்தது.
நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் கோல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோல்கத்தா முன்னிலையில் இருந்தது. இதையடுத்து காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நேரத்தில் ஜேவியர் ஹெர்னாண்டஸ் மீண்டும் கோல் அடிக்க கோல்கத்தா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கோல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வெல்வது இது 3வது முறையாகும். இதற்கு முன்னர் அந்த அணி கடந்த 2014 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் அந்த அணி கிண்ணத்தை வென்றிருந்தது.
கொரோனா கிருமி தாக்கம் எதிரொலியால் ரசிகர்களின்றி ஐஎஸ்எல் காற்பந்து இறுதிப்போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

