இந்திய வீரர்கள் இருவரால் தூக்கம் தொலைத்தேன்: ஆஸ்திரேலிய அணித்தலைவர்

இந்திய வீரர்கள் இருவரால் தூக்கம் தொலைத்தேன்: ஆஸ்திரேலிய அணித்தலைவர்

1 mins read
48fae8ef-4205-446d-a3e6-8e568d55850d
இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா (இடது), புவனேஸ்வர் குமார். படம்: ராய்ட்டர்ஸ் -

சிட்னி: இந்­திய கிரிக்­கெட் அணி­யின் பந்­து­வீச்­சா­ளர்­கள் இரு­வ­ரால் தமது தூக்­கத்­தைத் தொலைத்­த­தாக ஒரு­நாள், டி20 போட்­டி­க­ளுக்­கான ஆஸ்­தி­ரே­லிய அணித்­த­லை­வர் ஆரோன் ஃபின்ச் தெரிவித்து இருக்கிறார்.

ஜஸ்­பி­ரீத் பும்­ரா­வும் புவ­னேஸ்­வர் குமா­ருமே அவர் குறிப்­பிட்ட இந்­திய வீரர்­கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு இந்­திய அணி ஆஸ்­தி­ரே­லி­யா­விற்­குச் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்டு மூன்று டி20, நான்கு டெஸ்ட், மூன்று ஒரு­நாள் போட்­டி­களில் விளை­யா­டி­யது. அந்த மூன்று வகைப் போட்­டி­க­ளி­லுமே இந்­திய வீரர்­க­ளின் பந்­து­களை எதிர்­கொள்­ளத் திண­றி­னார் ஃபின்ச்.

"புவ­னேஸ்­வ­ரின் 'இன் ஸ்விங்' பந்­து­க­ளுக்­குப் பல­முறை எனது விக்­கெட்­டைப் பறி­கொ­டுத்­தேன். அதை எண்­ணி­ய­ப­டியே தூங்­கி­ய­தால் திடீ­ரென வேர்த்­துக்­கொட்டி, நடு­ந­டுவே எழ நேரிட்­டது," என்று அவர் நினை­வு­கூர்ந்­தார்.

அப்­போது, மூன்று ஒரு­நாள் போட்­டி­க­ளி­லும் ஒரு டி20 போட்­டி­யி­லும் புவ­னேஸ்­வ­ரின் பந்­து­வீச்­சில் ஃபின்ச் ஆட்­ட­மி­ழந்­தார்.

அதே­போல, மறு­நாள் பும்­ரா­வின் பந்­து­வீச்சை எப்­படி எதிர்­கொள்­வது என நினைத்தே தூக்­கத்தை இழந்­த­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

"பும்­ரா­வின் பந்­து­வீச்­சில் ஆட்­ட­மி­ழப்­ப­து­போல கனவு கண்டு எழுந்­து­விட்­டேன். அத­னால் மறு­நாள் அவ­ரது பந்­து­வீச்சை எதிர்­கொள்­வது எப்­படி என நினைத்தே தூங்க முடி­யா­மல் தவித்­தேன்," என்­றும் ஃபின்ச் சொன்­னார்.

அந்தச் சுற்றுப்பயணத்தில் 3-1 என டெஸ்ட் தொடரையும் 2-1 என ஒருநாள் தொடரையும் இந்தியா கைப்பற்றியது. டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது.