கிருமித்தொற்றால் 21 வயது காற்பந்துப் பயிற்றுநர் மரணம்

கிருமித்தொற்றால் 21 வயது காற்பந்துப் பயிற்றுநர் மரணம்

2 mins read

மாலகா: கொரோனா கிருமி தாக்­கி­ய­தால் 21 வய­தே­யான காற்­பந்­துப் பயிற்­று­விப்­பா­ளர் ஒரு­வர் மர­ண­ம் அடைந்த சம்­ப­வம் ஸ்பெ­யி­னில் நிகழ்ந்­தது.

ஃபிரான்­சிஸ்கோ கார்­சியா (படம்) என்ற இந்­தப் பயிற்­று­விப்­பா­ளர் லுக்கீமியா எனும் ரத்­தப் புற்று­ நோ­யா­லும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தார்.

தம்மை கொரோனா கிருமி தொற்­றி­ய­தற்­கான அறி­கு­றி­கள் தென்­பட்­ட­தும் அதை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­காக மாலகா வட்­டார மருத்­து­வ­ம­னைக்கு கார்­சியா சென்­றார்.

அங்கு கார்­சி­யா­வைப் பரி­சோ­தித்த மருத்­து­வர்­கள், அவர் கொரோனா கிரு­மித்­தொற்று, நிமோ­னியா ஆகி­ய­வற்­றோடு ரத்­தப் புற்று­நோ­யா­லும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­தைக் கண்­ட­றிந்­த­னர்.

மால­காவை மைய­மா­கக் கொண்ட அட்­லெட்­டிகோ போர்ட்­டடா அல்டா என்ற குழு­வின் இளை­யர் அணிக்கு இவர் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் பயிற்­சி­ய­ளித்து வந்­தார்.

கார்­சியா மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் அவ­ரது உடல்­நிலை சீராக இருப்­ப­தா­க­வும் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தமக்­குத் தக­வல் கிடைத்­த­தாக அட்­லெட்­டிகோ போர்ட்­டடா அல்டா குழு­வின் தலை­வர் பெப் பியூனோ தெரி­வித்­தார்.

ஆயி­னும், அடுத்த ஒரு மணி நேரத்­தி­லேயே கார்­சி­யா­வின் உடல்­நிலை மிகவும் மோச­ம­டைந்­து­விட்­ட­தா­கத் தக­வல் வந்­தது என்று அவர் குறிப்­பிட்­டார்.

"என்­னால் நம்ப முடி­ய­வில்லை. அப்­ப­டி­யெல்­லாம் நடக்­க வாய்ப்பே இல்லை என எனக்­குத் தோன்­றியது," என்று திரு பியூனோ சொன்­ன­தாக 'தி இன்­டி­பென்­டென்ட்' ஊட­கச் செய்தி கூறு­கிறது.

மாலகா வட்­டா­ரத்­தில் இது­வரை ஐவர் கொரோ­னா­வால் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். அவர்­களில் ஆக இளை­ய­வர் கார்­சி­யா­தான். மற்ற நால்­வ­ரும் 70 வய­தைத் தாண்­டி­ய­வர்­கள்.

ஸ்பெ­யி­னில் கொரோனா கிரு­மித்­தொற்று பெரும் பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­துள்­ளதை அடுத்து அங்கு அனைத்து முன்­னணி காற்­பந்து லீக் ஆட்­டங்­களும் கால வரம்­பின்றி ஒத்திவைக்­கப்­பட்­டுள்­ளன.

கிரு­மித்­தொற்­றால் அங்கு இது­வரை 342 பேர் மாண்­டு­விட்­டனர்; கிட்­டத்­தட்ட 10,000 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.