வெலன்சியா குழுவில் மூன்றில் ஒருவருக்குக் கிருமித்தொற்று

வெலன்சியா குழுவில் மூன்றில் ஒருவருக்குக் கிருமித்தொற்று

1 mins read

வெலன்­சியா: முன்­னணி ஸ்பா­னிய காற்­பந்­துக் குழுக்­களில் ஒன்­றில் வெலன்­சியா ஆட்­டக்­கா­ரர்­கள், பணி­யா­ளர்­களில் மூவ­ரில் ஒரு­வ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டு உள்­ள­தாக அக்­குழு நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது.

அவர்­கள் அனை­வ­ருக்­கும் கிருமி தொற்­றி­ய­தற்­கான அறி­குறி எது­வும் தெரி­ய­வில்லை என்­ப­து­தான் வியப்­புக்­கு­ரிய தக­வல்.

அர்­ஜெண்­டி­னா­வின் எசக்­கி­யல் கராய், பிரான்­சின் எலி­யா­கு­விம் மாங்­களா உள்­ளிட்ட ஐவ­ரைக் கிருமி தொற்­றி­ய­தாக கடந்த ஞாயி­றன்று வெலன்­சியா தெரி­வித்­தது. அதைத் தொடர்ந்து, ஆட்­டக்­கா­ரர்­கள், பணி­யா­ளர்­கள் என அனை­வருக்­கும் மருத்­து­வச் சோதனை நடத்­தப்­பட்­ட­தில் மேலும் பலரைக் கிருமி தொற்றியிருப்பது தெரி­ய­வந்தது.

இத்தாலியின் அடலான்டா குழுவிற்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் விளையாடுவதற்காக வெலன்சியா குழு கடந்த மாதம் இத்தாலியின் மிலான் நகருக்குச் சென்றிருந்தது.

"அந்த ஆட்டத்திற்குப் பிறகு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும் குழுவினரில் கிட்டத்தட்ட 35 விழுக்காட்டினரைக் கிருமி தொற்றிவிட்டது," என்று வெலன்சியா குழுவின் தலைவர் அனில் மூர்த்தி கூறினார்.

வெலன்­சியா குழு­வி­ன­ரைக் கிருமி தொற்­றி­ய­தை­ய­டுத்து அட­லான்டா குழு­வி­னர் அனை­வ­ரும் சுய­மாக தங்­க­ளைத் தனி­மைப்­படுத்திக்­கொண்­டுள்­ள­னர்.