காற்பந்து வீரர்கள் $3.9 மி. நன்கொடை

காற்பந்து வீரர்கள் $3.9 மி. நன்கொடை

1 mins read
8d12ba76-2e26-45ba-a916-ff4a84e97b0f
கோப்புப்படம்: ஏஎப்பி -

பெர்­லின்: பேர­ளவு நோய்ப் பர­வ­லாக உரு­வெ­டுத்­துள்ள கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான போருக்­குக் கைகொ­டுக்­கும் வித­மாக ஜெர்­மா­னிய தேசிய காற்­பந்து அணி வீரர்­கள் 2.5 மில்­லி­யன் யூரோ (S$3.94 மி.) நன்­கொடை வழங்­க­வுள்­ள­னர். "இது­போன்­ற­தொரு நேரத்­தில்­தான் நாம் ஒரு­வரை ஒரு­வர் பார்த்­துக்­கொள்­ள­வேண்­டும். தேசிய அணி வீரர்­க­ளான நாங்­களும் அது­கு­றித்தே சிந்­தித்து வரு­கி­றோம். நல்­ல­தொரு செய­லுக்­காக நன்­கொடை வழங்­கு­கி­றோம்," என்று ஜெர்­மா­னிய அணித்தலை­வர் மேனு­வல் நூயர் தெரி­வித்­துள்­ளார். அத்­து­டன், தொண்­டூ­ழி­யத்­தில் ஈடு­ப­டும்­படி தங்­க­ளின் ரசி­கர்­க­ளை­யும் ஜெர்­மா­னிய காற்­பந்து வீரர்­கள் கேட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.