பார்சிலோனா: ஸ்பெயினின் எஸ்பேன்யோல் காற்பந்துக் குழுவிற்காக விளையாடி வரும் சீனாவின் வூ லெய் எனும் ஆட்டக்காரர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் பார்சிலோனாவில் உள்ள தனது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதாக ஸின்ஹுவா செய்தி தெரிவிக்கிறது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல் தொழில்முறை சீனக் காற்பந்து ஆட்டக்காரர் லெய்தான்.
கிருமி தொற்றியதற்கான இலேசான அறிகுறிகள் லெய்யிடம் தென்படுவதாகக் கூறப்படுகிறது.
தனது குழுவினரில் அறுவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கடந்த புதன்கிழமை உறுதிப்படுத்திய எஸ்பேன்யோல் குழு நிர்வாகம், அதே நேரத்தில் அவர்களின் பெயர்களை வெளியிட மறுத்துவிட்டது.
மற்றொரு ஸ்பானிய காற்பந்துக் குழுவான வெலன்சியாவில் மூவரில் ஒருவரை கிருமி தொற்றியுள்ளது. அதேபோல, ஆலவேஸ் குழுவிலும் 15 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை ஸ்பானிய லீக் காற்பந்துப் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

